Wednesday, December 1, 2010

குடியாட்சி

குடியாட்சி

ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்னெல்லாம்
மதுவருந்தச் செல்வர் எம்மக்கள்
ஐந்தாறு கல்தொலைவு தாண்டி....

இன்றோ ....
இரண்டு கல்லிடையில்
ஒருகடையுண்டு எம் குடிமக்களுக்கு..!

ஆனால்..,

இன்றைக்கும்
ஐந்தாறு கல்தாண்டியே செல்கின்றனர்
எம்மக்கள் மேல்நிலைப் பள்ளிக்கு...

குடியாட்சியாம் குடியாட்சி
நல்ல குடியாட்சி....

No comments:

Post a Comment