Thursday, July 28, 2011

தூரம்

உண்ணுகின்ற உணவில்
உறுத்தும் விதமாய்
உருவொன்று கிடந்துவிட்டால்
உதறி எழுந்திடுவேன்
உதறியும் வீசிடுவேன்...

ஆனால்,

கல் தொலைவு பல
கடந்துவந்த வேளையில்
கட்டி வந்துண்ணும்
கட்டுச்சோற்றில் கிடந்த மயிர்
கண்ணீரை வரவழைத்தது...

மன்னித்துவிடு தாயே...