Wednesday, February 9, 2011

கலைந்து விட்ட கனவு

அவள்  தந்த முத்தத்தின்
ஈரம்கூட காயவில்லை...

அணைப்பிலிருந்து
விடுபடவே முடியவில்லை...

கட்டிலின் கால்களோ
நர்த்தனம் ஆடுகின்றன...

எங்கள் கால்களோ
எழுப்புகின்றன அனலை...

நாங்கள் இருவரும்
ஒன்றோடு ஒன்றாகும் போது
விழுந்து விட்டேன்
கட்டிலில் இருந்து
நான் மட்டும்...

புரிதல் இல்லாப் பிரிதல்

புரிதல் இல்லாப் பிரிதல்
நீ என்னைப்
புரிந்து கொள்ளாத போதெல்லாம்
ஏதோ பாடத்தைப்
புரிந்து கொள்ளாத மாணவன்மீது
ஆசிரியருக்கு வரும் கோபம்தான்
உன்மீது எனக்கும்....

பாடத்தைப் புரியவைக்க
முயற்சிக்கும்
ஆசிரியரைப் போலத்தான்
நான் உன்னுடன் போடும்
சண்டையெல்லாம்....