Monday, September 5, 2011

இளிவரல்

முன்னிருக்கையில் நீ
பின்னிருக்கையில் நான்...

உனதிடை தொடும்
எனது கரப்பூ

செல்லச் சிணுங்கல்களோடு
மெல்ல ஓட்டி வருகையிலே
இலை மலர்களைத் தூவி
கிளைக் கரங்களை அசைத்து
ஒலியெழுப்பி மகிழும்
புளிய மரங்கள்....

முன்னிருக்கையில் நான்
பின்னிருக்கையில் நீ

வெவ்வேறு வாகனங்களில்
இருவேறு மனிதர்களோடு..?

அன்றிலிருந்து
இன்றுகூட எனைப் பார்த்து
மலர்த்தூவிக் கரம் அசைத்தன
பலமரங்கள் சாலையிலே...

ஆனால்,

கைமறித்துக் காரித்துப்பி
கைக்கொட்டி ஏளனஞ்செய்து
இழிசொல் பேசுவதாகவே
பழிகொண்டதென் பாழ்மனம்...

No comments:

Post a Comment